My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

6.12.12

அடையாளம்...





இனிமேலும்
தண்ணீர் திறந்துவிட
மறுக்கப்பட்டால்...

இனி
எலிக்கறிதான்
சோறுடைத்த சோழ நாட்டின்
வரலாற்று அடையாளம்.

இனி
எலிக்கறிதான்
வக்கில்லாமல்
சோடைபோன நம்
கழங்கங்களின்
சூடுபட்ட அடையாளம்.

இனி
எலிக்கறிதான்
கர்நாடக அரசு
கயமைத் தனத்தின்
கறைபடிந்த அடையாளம்.

இனி
எலிக்கறிதான்
நீதி மன்ற உத்தரவு
நீர்த்துப் போனதன் அடையாளம்.

இனி
எலிக்கறிதான்
ஒன்றிணைந்த இந்தியாவின்
ஓர் உன்னத அடையாளம்...

இனி
எலிக்கறி மட்டும்தான்
காவிரி என ஒன்று
இருந்ததற்கான
உண்மையான அடையாளம்!!

2 comments:

மதுரை சரவணன் said...

attaiyaalaththin muulam nalla arai...

Indian Sri Lanka Tamil Newspaper said...

ஏழை விவசாயிகளின் வாழ்வு எப்போதும் போராட்டம்.

Post a Comment