My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

25.2.13

எர்வாமாடின் விக்கிறதுக்காவது சரிப்படுவாரா... எனது முகநூலிலிருந்து... 31

'பையனுக்கு பிஸ்கோத்து குடுத்திருக்கானுங்க; குடிக்க தண்ணி குடுத்திருக்கானுங்க; போர்த்திக்க லுங்கிகூட குடுத்திருக்கானுங்க; வலிக்கக்கூடாதுன்னு கிட்டத்திலேர்ந்து சுட்டிருக்கானுங்க. அவனுங்களுக்கு ரொம்பவும் இளகிய மனசு' - நாராயணசாமி அறிக்கை வந்தாலும் வரலாம்.

000

ராகுல் பிரதமரா? கிளார்க்கு வேலைக்கு கூட லாயக்கு இல்லலாத ஆளு - ஜெத்மலானி. 

சரி. எர்வாமாடின் விக்கிறதுக்காவது அந்தாளு சரிப்படுவாரா பார்த்து சொல்லுங்க..

000

நேற்று, 
சொந்த நாட்டில், போபால் படுகொலைக் காட்சிகளைப் பார்த்து கண் கலங்காத காங்கிரஸ் கயவர்கள், 
இன்று, 
அயல் நாட்டில் நடந்த ஈழப்படுகொலையைப் பார்த்தா கண்ணீர் விடப்போகிறார்கள்? 
நாளை, நமக்கு கூடங்குளத்தில் சங்கு ஊதும் காட்சிகள் கூட இந்தக் காங்கிரசுக்காரர்களின் கல்மனதை இளக்கப்போவதில்லை. 
சாவு வீட்டில் சென்று டான்ஸ் ஆடுகிறவனுக்கு துக்கம் என்றால் என்னவென்று தெரியப்போகிறது?!

000

உலகின் அடுத்த மூலையில் இருக்கும் அமெரிக்காவுக்காக கவலைப்பட்டு, ஆப்கானிஸ்தானை வம்புக்கு இழுத்து, ஒரு 'கற்பனைக் கதை' பின்னி வெளியிட்ட ஒலகமகா நடிகன், பாலச்சந்திரன் பிரபாகரனின் படங்களைப் பார்த்து, மனமிறங்கி, கற்பனை கலக்காத, பக்கத்து நாட்டில் நடந்து முடிந்த ஒரு உண்மைக் கதையை படமாக எடுத்து இந்தியாவில் வெளியிட தைரியம் இருக்கிறதா?

000

ஜெ.வுடன் சாலையில் பேசியதை வைத்து கூட்டணி என்று சொல்லக் கூடாது - வைகோ

வைகோ போயஸ் கார்டன் கேட்டை கெட்டியமா புடிச்சிக்கிட்டு, தேவுடு காத்து பேசின பொறவுதான் அதை கூட்டணின்னு சொல்லணும்.

000

அம்மா பிறந்தநாள் காவடி, பால்குடம். ஆம்புலன்ஸுக்கு வழி கிடைக்காததால் வேறு வழியில் திருப்பிவிட்ட புதுக்கோட்டை போலீசார்.

அம்மாவோட பாவக்கணக்குல இன்னொண்ணு. தொண்டர்கள் பிறந்த நாள் பரிசு. இத்தகைய தொண்டர்களுக்கு எமலோகத்தில் கொத்திக்கிற எண்ணைக் கொப்பரை ஒண்ணே ஒண்ணு போதுமான்னு தெரியலை.

000

பேச்சுக்கு கைதட்டாததால் ஆவேசம்! விவசாயிகளை கடுமையான வார்த்தைகளால் அறிவில்லாதவர்கள், உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்று திட்டிய வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம்.

'இது ஒண்ணும் ஜால்ராக்கள் நிறைந்த சட்டசபை இல்லை' என்று சொல்லி, விவசாயிகள் அமைச்சர் மூஞ்சியில் கரியைப் பூசியிருக்கணும். கைதட்டலை கேட்டு வாங்குவாராம். கேவலமான புத்தி!

000

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.–சி20 இன்று விண்ணில் பாய்கிறது! ஜனாதிபதி வருகை! 

ராக்கெட்டை எதுக்கு விடுறாங்க? மேல போனப்புறம் புளியோதரை பொட்டலம் போடுறதுக்கான்னு கேக்கறான். டேய், ரெண்டுத்தையும் மூடிக்கிட்டு மாடு மேய்க்கிற வேலையப் பாருடான்னா கேக்கமாட்டேங்கறான்.

000

அம்மா, 
உங்க கட்சிக்காரனுங்க உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்றேன் பேர்வழி அப்படீன்னுட்டு, பேனர்ல உங்கள 'வஞ்சப் புகழ்ச்சி அணியில' கிண்டலடிச்சி எழுதி இருக்காங்க. 

கொஞ்சம் சேம்பிள் பாருங்க அம்மா : 

"தலைக் காவிரியையே தமிழகத்துக்கு கொண்டுவந்துவிட்ட அம்மா அவர்களை வாழ்த்த வயதில்லை..."

உங்களைக் கிண்டலடித்து பேனர் வைத்த ஆசாமிகளை கையும் களவுமாகப் பிடித்து அவர்கள் மீது தக்க ஆக்சன் எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

000

"பத்து டியூ கட்ட முடியாம பெண்டிங்குல இருக்கு சார். பேங்கு நோட்டீஸ் மேல நோட்டீஸ் அனுப்புது. இனிஷியல் அமௌண்ட்டைக் கட்ட பொண்டாட்டி தாலியை சேட்டு கடைல அடகு வெச்சேன். இன்னைய தேதி வரைக்கும் மீட்க முடியலை. டிராவல்ஸ் காரை வச்சி மேய்க்கிறதுக்கு, நாலு எரும மாட்டை வாங்கி மேய்ச்சுக்கிட்டு, ஊர்லயே செட்டில் ஆகியிருக்கலாம்." - ஒரு கார் 'ஓனர்' பொறுமுகிறார். 

ஆனா, காருக்கு சுத்த தமிழ்ப் பேரு 'மகிழுந்து.' 

மகிழுந்து ஓனர் எவ்வளவு மகிழ்ச்சியா இருக்காரு பார்த்தீங்களா?

தமிழ் 'அறிஞர்கள்' சும்மணாங்காட்டியும் திண்ணையில குந்தியிருக்கலாம். இப்படியெல்லாம் வாய்க்கு வந்தாப்ல பேர் வைக்கப்படாது...!

000

அன்று ராஜாஜி சொன்ன குலத் தொழில் தொனியில்தான் இன்று சுப்பிரமணி (சுவாமி என்று இனிமேல் விளிக்கக்கூடாது) பிரபாகரனின் மகனையும் தீவிரவாதி லிஸ்ட்டில் சேர்திருக்கிறார். சு.சாமியின் குலத் தொழில் வேதம் ஓதி துட்டு வாங்குவது என்றால் அதையே ஏன் அவர் தொடராமல் வேறு ஏதேதோ அசிங்கமான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்? சொந்த குலத்துக்கே துரோகம் செய்யும் துரோகி.

000

பால்வடியும் முகத்தோடு அமர்ந்திருக்கும் பாலச்சந்திரன் ஒரு சில நிமிடங்களிலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இலங்கை அரசின் இனப்படுகொலை! இந்தியா இன்னும் மௌனம் காப்பது ஏன்?: தொல்.திருமாவளவன் கண்டனம்.

ரொம்பக் பொங்காத ராசா. ரத்தக் கொதிப்பு ஒடம்புக்கு ஆகாது. உனக்கு ராஜபக்சேவோட கை குலுக்கிட்டு, ஒரு டீ குடிக்கணும். அம்புட்டுதானே? மத்திய அரசு கொஞ்ச நாள் கழிச்சி சாவகாசமா ஒரு பிளைட்டு அனுப்பும். அப்போ போனாப் போதும். அதுவரைக்கும் கியூவுல நில்லு!

000

பாலசந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் - முதல்வர் ஜெயலலிதா.

இது......., இந்த வார்த்தைக்குத்தான் பேனர் புகழ் சீமான் இத்தனை மணித் துளிகளாக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அடுத்த சைதாப்பேட்டை மீட்டிங்குல 'ஈழத்தை வென்றெடுத்த இனமானத் தாய்' எனும் பட்டத்தை செல்வப் பெருந்தகை சீமான் வழங்குவார்!

000

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி - கலைஞர் கீச்சு. 

ஆமாம். இனிமே, காவிரி டெல்டாவில் கேழ்வரகு விளைவதற்குப் பதிலாக நெய்யாகவே வடிந்துவிடும். தஞ்சை விவசாய்கள் அனைவரும் ஆழாக்கை எடுத்துக்கொண்டு வரிசையில் நிற்கவேண்டியதுதான் பாக்கி. (தல, பொன்னர் சங்கர் ரெண்டாம் பாகத்தை எப்ப எழுதுவீங்க?)

000

"பாவம். நடையா நடந்து வர்றீங்களே? ஒரு 'இன்னோவா' வேணும்னா அனுப்பிவிடவா? வைய்சான காலத்துல மூட்டு இன்னாத்துக்கு ஆகும்?"

"இன்னோவா வாங்கறதுக்கு நான் ஒண்ணும் நாஞ்சில் இல்லை."

"சரி. ஃபார்ச்சூனர் அனுப்பவா?"

"ம்.... வேணாம்."

"அட, ரோசத்தைப் பார்றா! சரி. பார்த்து நடந்து போங்க. இந்த டிஎம்கே காரவுங்க வண்டிய வேகமா ஓட்றானுங்களாம். தவளக்கா மாதிரி நசுக்கிடுவானுங்க."

"......"

"என்ன, மௌனமா இருக்கீங்க? சரி, வைகோ. வரட்டா?!"

"அம்மா... கார் அது இது எல்லாம் வேணாம். கவுரதையா ரெண்டு எம்பீ சீட்டு... கொடுக்க முடியும்னா, நாம பேரம் பேசலாம்."

"யோசனை பண்றேன். ஆனா ரெண்டு சீட்டு கேக்கறீங்களே... உங்க தகுதிக்கு கொஞ்சம் ஜாஸ்திதான். பாக்கலாம்!"


000

இலங்கைப் படையின் மறுப்பிலும், ஜெவின் ஒரு சட்டசபைக் கண்டனத்திலும், கருணாநிதியின் சுயநல ஐநா சபை மனுவிலும், சீமானின் தெருவுக்குத் தெருவான பேனர்களுக்குள்ளும், புதிய தலைமுறையில் சூடான விவாதங்களிலும், தினமலரின் கொச்சைப்படுத்தலிலும், காங்கிரஸ் குண்டர்களின் மன மகிழ்விலும், கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் மரணம் சடுதியில் புதைக்கப்பட்டு விடும்!

000

இந்தக் கருணை மனு காத்திருப்புக்கூட ஒரு விதத்தில் 'கரகரவென்று' கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் தண்டனைதான். கருணை கிடைக்குமா கிடைக்காதா என்று ஒருவனை நித்தம் நித்தம் சித்திரவதை செய்து சாகடிக்கிறது. தூக்குத் தண்டனையை விட, மிக மிகக் கொடுமையானது கருணை மனுதான். முதலில் இதை ஒழித்துக்கட்ட வேண்டும்!

000

உங்க பேரு என்னன்னு கேக்கறவுங்களுக்கு நாராயணசாமின்னு பதில் சொன்னா, 'ஓ, அவரா நீ' அப்படீன்னு ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறாங்க. - நாராயணசாமி எனும் பெயர் கொண்ட நண்பர் ஒருவரின் புலம்பல்.

000

வேளாண் துறையில் தமிழகத்துக்கு முதலிட விருது!

சரியான தேர்வு. அப்படியே, காவிரி நீர் பாய்ந்த இடத்தையெல்லாம் பாளம் பாளமாக வெடிக்க வைத்த கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும், நீதி மன்றங்களுக்கும் தலா ஒரு பித்தளை கோப்பையாவது கொடுத்து கவுரவப்படுத்தி இருக்கலாம்


000


2 comments:

Anonymous said...

1. //இப்படியெல்லாம் வாய்க்கு வந்தாப்ல பேர் வைக்கப்படாது..//

--pleasure car...=மகிழுந்து.

2. //தவளக்கா மாதிரி நசுக்கிடுவானுங்க.///

"தவக்கா" மாதிரி நசுக்கிடுவானுங்க...???!!!
---------------------------------------------------------------------------------------------

Very nice...

கவியாழி said...

நறுக் நறுக்குன்னு கேட்டிட்டீங்க

Post a Comment