My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

22.2.13

இது செம ஹாட்டு மச்சி!!!

நம்ம ஊரு ரேடியோ ஜாக்கிகள் போடும் மொக்கைகள் படு கேவலமாக இருக்கும். மத்தியான சாப்பாட்டுக்கு சாம்பார் நல்லதா அல்லது காரைக்குழம்பு நல்லதா... உடனே போன் எடுங்கள் எங்களுக்கு சொல்லுங்கள். உங்களுக்கு வத்திபொட்டி ஒன்று பரிசாகக் காத்திருக்கிறது... இத்தகைய ரேஞ்சில் ஜாக்கிகளின் அரட்டை தினந்தோறும் தொடர்கிறது. விலையுயர்ந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பைப் போட்டு சாணி மிதித்து வரட்டி தட்டுகிறார்கள் இந்த கேடுகெட்ட மடையர்கள். நீங்க நான் ராஜா சார் எனும் ரேடியோ மிர்ச்சி புரோக்கிராமில் செந்தில் என்பவர் ஒரு இரண்டு வரியில் சொல்லக்கூட ஒரு நிகழ்வை இரண்டு மணி நேரத்துக்கு இழுத்துச் சொல்வார். அவர் பாணியில் ஒரு உதாரணம் இங்கே...

ராஜா சார் கைக்கொழந்தையா இருந்தப்போ, ஒரு நா 'கபுக்குன்னு' திரும்பிப் படுத்தாராம். அப்போ, பக்கத்தில் இருந்த ஆர்மோனியத்துல அவர் கை பட்டு ஒரு அருமையான இசை வந்துச்சாம். சுத்தி இருந்தவங்க எல்லாம் ஆச்சரியத்தோட பார்த்தாங்களாம். எல்லாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. நமக்கு ஒரு இசை ராசா கெடைச்சிட்டாரு; இந்த உலகத்துக்கு ஒரு இசை ராசா கெடைச்சிட்டாரு அப்படீன்னு. அப்ப என்னடான்னு பார்த்தா, படபடன்னு ஒரு சத்தம் வந்துச்சாம். என்னது? படபடன்னு சத்தம். அது என்ன படபடன்னு சத்தம். அதை என்னவென்று அறிந்துகொள்ள என்னோடு இணைந்திருங்கள்.

நீங்க, நான், ராஜா சார். நான் உங்கள் செந்தில். இணைந்திருங்கள் என்னோடு. இடை வேளைக்கு அப்புறம் நான் நிறைய ராஜாசாரைப் பத்தி சொல்றேன். இது செம ஹாட்டு மச்சி!

(இடைவேளை...)

அப்போ, சுத்தி இருந்தவங்க எல்லாம் ஆச்சரியத்தோட பார்த்தபோது, படபடன்னு ஒரு சத்தம் வந்ததுன்னு சொன்னேன் இல்லையா? உங்களுக்கு கேக்க ரொம்ப ஆவலா இருக்குமே? அதே ஆவலோடதான், சுத்தி இருந்தவுங்களுக்கும் இருந்துச்சி. அது என்ன படபட சத்தம்...? யாருக்கும் ஒண்ணும் புரியலை. ஹி, ஹி, சுத்தும் முத்தும் பாக்கிறாங்க... ஆனா, அந்த சத்தம் எப்படி வந்துச்சி, எங்கிருந்து வந்துச்சி, எதனால வந்துச்சி, எதற்காக வந்துச்சி அப்படீன்னு அவங்களுக்கு பூரியவே இல்லை. எல்லாரும் ஆச்சரியத்துல அப்படியே உறைஞ்சிபோயி இருந்தாங்க. எப்படி அந்த சந்தம்? எங்கிருந்து? இடைவேளைக்கு அப்புறம் வந்து சொல்றேன். இணைந்திருங்க.

நீங்க, நான், ராஜா சார். நான் உங்கள் செந்தில். இணைந்திருங்கள் என்னோடு. இடை வேளைக்கு அப்புறம் நான் நிறைய ராஜாசாரைப் பத்தி சொல்றேன். இது செம ஹாட்டு மச்சி!

(இடைவேளை...)

வணக்கம். நாந்தான் உங்க செந்தில். என்ன, கதை சுவாரஸ்யமா போய்ட்டே இருக்கில்ல? பாருங்க. ராஜா சார் வாழ்கையில என்னவெல்லாம் நடந்திருக்குன்னு. ம். நான் எங்க விட்டேன்? ஆமா. இப்போ ஞாபகம் வந்திடுச்சி. படபடன்னு ஒரு சத்தம் வந்ததுன்னு சொன்னேன் இல்லையா, எல்லோரும் ஆச்சரியத்தில அதிர்ந்து போய் கிடந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா? இப்போ அதைப் பத்தி சொல்றேன். அது என்னன்னு தெரிஞ்சிக்க என்னோடு இணைஞ்சிருங்க. நான் உங்க செந்தில்.

நீங்க, நான், ராஜா சார். நான் உங்கள் செந்தில். இணைந்திருங்கள் என்னோடு. இடை வேளைக்கு அப்புறம் நான் நிறைய ராஜாசாரைப் பத்தி சொல்றேன். இது செம ஹாட்டு மச்சி!

(இடைவேளை...)

தோ, வந்துட்டேன். நான் உங்க செந்தில். நீங்க கேட்டுக்கிட்டு இருக்கிறது, ஹி, ஹி, உங்களுக்கே தெரியுமே? கதை சுவாரஸ்யமா போய்கிட்டு இஉர்க்குல்லே? சரி. அந்த ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான, ஒரு திருப்பம் நிறைந்த அந்த சம்பவத்தை உங்களுக்கு இப்போ சொல்றேன். படபடன்னு ஒரு சத்தம் வந்துச்சின்னு சொன்னேன் இல்லையா? எல்லோரும் ஆச்சரியத்துல கிடந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா? அது இதுதான். கைக்குழந்தை ராஜாசார் கை ஆர்மோனியத்துல பட்டு ஒரு இசைத்துளி எழுந்தவுடனே, ஏதோ ஒரு மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குயில், அந்த இசையைக் கேட்டு ரசித்து, படபடவென்று தன் இறக்கைகளை அடித்துக்கொண்டே பறந்துவந்து, அவர் வீட்டுக்குள் நுழைந்து, ஒரு சிறு ரோஜாப்பூவை அவர் கையில் வைத்துவிட்டு, கூக்கூ கூக்கூ என்று கத்தியதாம். எப்படி? கூக்கூ... கூக்க்கூ...

இப்படி பல சுவாரஸ்யமான ராஜாசார் கதைகளை உங்களுக்கு தினந்தோறும் வந்து சொல்கிறேன். என்னோடு இணைந்திருங்கள். நான் உங்க செந்தில். நீங்க இதுவரை கேட்டது நீங்க, நான், ராஜா சார். இது செம ஹாட்டு மச்சி!!!

5 comments:

Philosophy Prabhakaran said...

யோவ்... என்னய்யா இது மண்டை காயுது...

Anonymous said...

superb sir , this is the real treat to the people who love real music , please continue until hero worship terminates.

Anonymous said...

even bethovan didn't sing that he will be the music king forever , this rasaiya from pannaipuram think he is the master of world , what a shame on you raja ,

காரிகன் said...

இப்ப நிறைய இளையராஜா பதிவர்கள் இப்படித்தான் சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்காங்க. பின்னால இந்த துணுக்கை கூட மேற்கோள் காட்டி சிலர் ராஜாவை பற்றி புகழ்ந்து எழுதலாம்.

Jayadev Das said...

டேய் மவனே செந்தில், நீ மட்டும் கையில கிடைச்சே......... டெட் பாடிதாண்டா...........

Post a Comment