My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

24.1.12

இன்று, ஒளி வருமெனக் காத்திருந்தோம்



ன்று, ஒளி வருமெனக் காத்திருந்தோம்.
இருண்ட கண்டத்தின்
கடைக் கோடியில்
கேட்பாரற்றுக் கிடந்த
சோகை படிந்த சிற்றூர்.
இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்!
பனிச் சாரல் சடசடக்க
கண்ணாடிச் சன்னல் தடதடக்க
கருப்படர்ந்த இரவின் ஊடாக
வெளியில் பார்வையை
உலவ விட்டுக் காத்திருந்தோம்;
இருளில் வழி சொல்லும்
ஒளிக்காக.
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும்
என்றார்கள்.
அந்த ஒளியோடு
ஒரு சேதியும் வருமென்றார்கள்!
எங்கள்
பசிக்கான உணவு
குறைக்கப்பட்டிருந்தது.
எங்கள்
உழைப்பின் கூலி
சுறண்டப்பட்டிருந்தது.
ஜமுக்காளத்துக் கிழிசலில்
ஊதைக் காற்றுப் புகுந்து
உயிர்க் குலையும் சில்லிட்டது.
ஏமாற்றம் தந்த
பாலற்ற முலைக்காம்பால்
நிறுத்தாமல் விசும்பின
பச்சிளங் குழந்தைகள்.
வயது முகவரி எழுதிய
வரிகளின் சுருக்கத்தோடு
ஏதாவது உண்ணக்கேட்டு
ஏக்கத்தோடே கை நீட்டி
எங்களையே பார்த்திருந்தது
எங்கள் மூதாதைக் கூட்டம்.
யாவரும்தான் காத்திருந்தோம்.
தினவெடுத்த தோளோடும்
விலிசுமந்த இதயத்தோடும்
இளைஞர்களும் பெண்களும்
கால் கடுக்கக் காத்திருந்தோம்!
எங்கள் யாவரையும்
ஒன்று சேர்ந்திருக்கச் சொல்லி
சேதி வருமென்றார்கள்.
வருகின்ற ஒளியின் ஊடாய்
வானுயரக் கரமுயர்த்தி
விண்ணதிரக் கோஷமிட்டு
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்துவிடச் சொன்னார்கள்.
காத்திருந்தோம்.
செக்கர் சூரியன்;
உடலின் உழைப்பு;
கரங்களில் கருவி;
இவைகளின் வேதி மாற்றத்தால்
சுரக்கும் வியர்வை.
வியர்வை விழுந்தால்
விளையும் கதிர்.
வளையும் இரும்பு.
உழைப்பு எமது.
எனில்;
அதன் வினையும் எமதன்றோ?
வியர்வையின் வினை
மறுக்கப்பட்டுவிட்டதால்
இந்த இருளில்தான்
நாங்கள்
இருந்து கொண்டேயிருந்தோம்.
பழக்கப் பட்டுப்போன
இருளுக்கு மாற்றுத் தேடித்தான்
இங்கே காத்திருந்தோம்.
இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்.
அதோ
வந்துவிட்டது.
வந்தேவிட்டது.
இல்யீச் விளக்கு!
அதன் ஒளிக்கதிரில்
அனைவரும் துள்ளினோம்.
வந்தேவிட்டது
இல்யீச் விளக்கு!
அப்போது எங்களுள்
கூடவே குந்திக்கோண்டிருந்த
பேதமை, மடமை,
ஐயம், மதம்,
கூச்சம், அச்சம்,
அத்தனையும் துணுக்குற்று
இருளில் சிதறியோடியதை
நாங்கள் காணுற்றோம்.
ஒளி சொன்ன சேதியில்,
வந்துதித்த ஒளியினூடாய்,
வானுயரக் கரமுயர்த்தி,
விண்ணதிரக் கோஷமிட்டு,
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்து செயல்பட்டோம்;
குவியல் குவியலாய்.
எங்கள் பின்னால்
எங்களுக்காக,
ஒரு தாயும்கூட நடந்து வந்தாள்.
அப்பக்கூடை தலை சுமக்க!
வினையின் வினையறுக்க
வீர நடையிட்டோம்.
கரத்தில் கரங் கோர்த்து,
நெஞ்சில் உறமிருத்தி,
மண்ணில் குருதி பாய்ச்சி,
நிலம் அதிர நடையிட்டோம்.
அடித்து விரட்டப்பட்டதால்
அரண்மனைக் குகையிலிருந்து
புறமுதுகிட்டோடின
நரித்தோல் உடல்கள்.
பின்,
நாங்கள் வென்றோம்.
வென்ற பின்,
எம் வியர்வை எமதானது;
விளைக் கதிரும் எமதானது;
வளையும் இரும்பு எமதானது;
உழைப்பு எமதானது;
எனில் -
அதன் வினையும் எமதேயானது!
வினை தூண்டியது
இல்யீச் விளக்கு!
நன்றி
விளாதிமிர் இல்யீச் உல்யானோவ்!
உனது பிறப்புக்கும்;
உனது போதனைகளுக்கும்;
உனது வழிகாட்டுதலுக்கும்;
உனது இல்யீச் விளக்குக்கும்!
உனது விரல் நீட்டிய திசையில்
கணக்கிலடங்கா இல்யீச் விளக்குகள்
உதித்துக்கொண்டேயிருக்கும்;
ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்.
எமை நம்பு
எமதருமை இல்யீச்…!

8.1.12

மருத்துவமனையில் ஜனநாயகம்



இந்திய ஜனாதிபதிகள் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் நம்பிக்கையற்று, வெளி நாட்டு சுற்றுப்பயணம் என்கிற போர்வையில் வைத்தியம் பார்க்க ஓடுகிறார்கள். தமிழக முதல்வர்களிலிருந்து அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லியிலிருக்கும் மத்திய அமைச்சரவைக் குழுக்களும், ஒரு சிறு தும்மலுக்குக்கூட உயர்தர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா இந்திய மருத்துவத்திலேயே நம்பிக்கையில்லாமல் அமெரிக்கா சென்று வைத்தியம் பார்க்கிறார். ஒரே உதையில் நானூறு பேரை கொன்றுபோடும் சூ.ஸ்டார் சிங்கப்பூருக்கு வைத்தியம் பார்க்க ஓடுகிறார். ஆனால், 'எனது இந்தியா, இந்தியா ஒரு வல்லரசு, ஜனகன மண, ஜன நாயகம்' எனும் வெற்றுக்கோஷங்களுக்கு மட்டும் இங்கே குறை கிடையாது!

வெறும் போஸ்ட் மார்ட்டம் செய்யும் அலுவலகமாக மட்டுமே அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன. இதற்கு ஆளும் வர்க்கத்தின் அலட்சியப்போக்குதானே காரணம்?

தனியார் மருத்துவமனைகளில்தான் கவனிப்பு சரியாக இருக்கும் எனும் தொனி சாதாரண, பாமர மக்களிடையே உருவாக்கப்பட்டுவிட்டது. இந்தக் குழப்பங்களிடையே நடந்ததுதான் தூத்துக்குடி வீச்சறிவாள் சண்டை. மருத்துவரின் கொலை நியாயமென்பதும், அனியாமென்பதும் விவ்வதகளமாகிவிட்டது.

இத்தகைய விவாதங்களை உடனடியாக நிறுத்திவிட்டு, நாம் உடனடியாகச் செய்யவேண்டிய தீர்வென்ன?

மத்திய அரசாங்கத்தையும், அரசாங்கத்தைத் தலைமை ஏற்று நடத்தும் மாநில முதல்வர்களை முதலில் கண்டிக்கவேண்டும். ஏனெனில் அவர்களின் பூரண மேர்பார்வையிலும் ஒப்புதலிலும்தானே அரசு மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன? அதை மேம்படுத்தத் தவறிய அவர்களை கண்டனத்துக்குள்ளாக்கவேண்டும். மேலும் ஜனாதிபதிகள், மத்திய முதல்வர், அமைச்சர்கள், மானில முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என, அரசை நிர்வகிக்கும் யாவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பதை நாம்தான் கட்டாயமாக்கவேண்டு. இத்தகையோர் அரசு மருத்துவமனைகளைத் தவிர்த்து, தனியார் மருத்துவ மனைகளுச் சென்றால், அந்த மருத்துவமனைகளின் முன்னால் ஆர்பாட்டம் நடத்தவேண்டும். அங்கிருந்து அவர்கள் வி
ட்டியடிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.

தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகள் தரத்தை உயர்த்திட இவ்வாறான போராட்ட முறைகள் உடனடித் தேவையாக இருக்கிறது.