My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

4.8.10

ச்சே... சீ...செம்மொழி மண்டப உலா

கோவைப் பந்தலிலே,
கோடிகளிலே
தமிழுக்குக் காப்பு.
முன்வரிசையில் முதல்வர்;
பாராட்டுகளில் திகட்டிப் போனார்
அடுத்த தேர்தலில்
தமிழ்க் குடிகளின்
ஓட்டுகளில் மூழ்கிப் போவார்
முதல்வருக்குப் பக்கத்தில்அமைச்சர் பெருமக்கள்;
ஆடி, ஓடி, ஆய்ந்து, ஓய்ந்து, அலுத்து,
முதல்வர் சிரித்தால் இவர்களும் சிரித்து,
அவர் அழுதால், இவர்கள் மூக்குச்சிந்தி,
அரங்கத்தில் ஓய்வெடுக்கிறார்கள்.
பாராட்டும் பதவிகளும்
அவர்களின் வாரிசுகளுக்கும்உண்டென்றரிக.
பின் வரிசயில்
பாதம் நக்கிப் பாவலர்கள்.
எச்சிலால் பாதம் கழுவி
பரிசில் வாங்க்கிப் போவார்கள்.
பணமுடிப்பும் உண்டு.
சிலருக்கு மகாபலிபுரத்தில்
நிலவொளியில்
அடிவருட
வருடாந்திர வாய்ப்புமுண்டு.
பிற்பாடு பேச்சாளர்கள்.
”தமிழே, இலக்கியமே,எங்களை வாழ வைக்கும்எம்குலத்தாயே”
என்றுசிலேடையில் சிலாகிப்பார்கள்.
ஆனால், தன்னைப் புகழ வேண்டாமெனக் கையமர்த்தும் முதல்வர்.
பெருந்தன்மயே, உன் பேர்தான் கருணா நிதியா?
அதற்கும்பின்னே அதிகாரிகள்,
அலுவலர்கள்.
’அடுத்த பிரமோசனுக்கு?’
கண்டிப்பாக ஆகட்டும் பார்க்கலாம் -
கருணா நிதி ஆட்சியிருந்தால்.
கண்டிப்பாக உங்களுக்கு ‘எஸ்மா’ -
மண்புமிகு மேடம் வந்தால்.
அதற்குப் பின்னால்
கூஊஊஊட்டம்.
கட்டுக்கடங்கா உடன்பிறப்புக்கள்.
தமிழ் வெறி தலைக்கேறி,
டப்பாங்க்குத்து ஆடினால் தேவலைஎன்னும் நிலையிலும்,
அரங்க நாகரீகமும்,
அரசியல் நாகரீகமும்,
தமிழ்ப் பண்பும்,
வட்டத்தின் முறைத்தலும்,
அவர்களைத் தடுத்தாள்கிறது.
அதர்கப்பாலே
கூர்ந்து பார்த்தால்,
நூற்றுக்கணக்கில்
அலைகடலெனத் திரண்டு
காற்று வாங்கிக்கொண்டிருக்கும்
பூர்வத் தமிழ்க்குடிகள்.
ஒரு ரூபாய் அரிசியின்
செரிமானத்துக்காக
காலாட நடந்துவந்தவர்கள்.

No comments:

Post a Comment