My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

25.2.12

எனது முகநூலிலிருந்து... 3



# "வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கை பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வெளியிட முடியாது' என, காங்., தலைவர் சோனியா, மறுப்பு தெரிவித்துள்ளார்.

சோனியா பக்கம்தான் நியாயம் இருக்கிறது. இந்திய சட்டம் இத்தாலிக்காரிக்கு எப்படிப் பொருந்தும்?


# தமிழ்நாட்டுல எப்பல்லாம் என்கவுண்டர் நடக்குதோ அப்பல்லாம் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில ரெண்டு மெத்தைய போட்டு, படுக்கைய ரெடி பண்ணிடுவாங்க! போலீசுக்குத்தான்!!

# கொள்ளை கும்பலை போலீஸ் படை சுற்றி வளைத்ததும் கொள்ளையர்கள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டனர். இதில் துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசில், தேனாம் பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசில் தலையிலும் கண் அருகிலும் கையிலும் குண்டு பாய்ந்தது. இருவரும் மயங்கி கீழே விழுந்தனர்.

இருவருக்கும் காயம் பலமாக இருப்பதால் பேசக்கூடாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த முடியவில்லை.

துப்பாக்கி, குண்டு, பாய்ந்து, தலை, உயிர் பிழைத்தல், ஒரே நாள், எழுந்து உட்காருதல்... டைரக்டர் யாரு? 'Continuity ' சரியா வரலியே?!

# அகதிகள் போல வட இந்தியர்களை, நம் சக நாட்டவரை, ஒரே இடத்துக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து, தரையில் உட்கார வைப்பதும், கைரேகை, உடல் அடையாளங்கள் எடுப்பதும், பெயர் முகவரியை வலுக்கட்டாயமாகப் பதிய வைப்பதும், அவர்களைக் கீழ்த்தரமாக நடத்துவதும், எதோ ஹிட்லர் போர்க்குற்றவாளிகளிடத்தில் விசாரிப்பது போலிருக்கிறது. இந்தத் தமிழகப் போலீசின் வட இந்தியர்கள் மீதான அடக்குமுறை அவர்களது கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. யாரோ ஒருவன் திருடிவிட்டான் என்பதற்காக வடந்தியர்களையே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது முட்டாள்தனமான, பேடித்தனமான செயல்.

'இந்தியர்கள்' எனச் சொல்லிக்கொள்ளும் யாவரும் இந்தச் செயலுக்காக வெட்கப்படுங்கள். துப்பாக்கி சூட்டுக்கு தலையில்(!) கட்டுப்போட்டுப் படுத்திருக்கும் தமிழக போலீசை இனி ஒரு கைக்குழந்தைகூட 'இது நம்ம சிரிப்பு போலீசு' என்று கூறிவிடும்.

கையாலாகாத கோழைகளுக்கு ஸ்காட்லாந்து யார்டு அளவுக்கு அந்தஸ்து!! து... து...!!


# தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இத்தாலியக் கப்பல் ஊழியர்கள், லத்தோரே மாசிம்லியனோ மற்றும் ஷல்வசோரே கிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது அரசு விருந்தினர் மளிகையில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏன்? நெ.10, ஜன்பத் ரோடு வீட்டு பெட் ரூம்லயே, ஏசிய போட்டு படுக்க வச்சிருக்கலாமே? கரண்டு போய்டுத்துன்னா, சோனியாவ விசிறியால விசிறிவிடச் சொல்லுங்க!!

# கோர்ட்டில் ஆஜராக வந்த திவாகரனுடன் தி.மு.க.,வினர் திடீர் சந்திப்பு.

பன்றிகள் மலம் தேடுவதில் ஆச்சரியமில்லை.

# தனித்தே போட்டியிட்டிருந்தால் ஆளுங்கட்சியாகி இருப்போம்: ராமதாஸ்.

டவுசர் நாடா வெளியில தொங்கறதக் கூட கவனிக்காமப் பேசுராரு பாருங்க!

# "2020ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என கூறி வருகிறீர்கள். ஆனால் இன்றும் சில மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் பிறக்கின்றன. நாம் செல்லும் பாதை சரியானதா?"

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது. இந்த வளர்ச்சி 10 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020க்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ள நிலையில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தால் நம்நாடு வல்லரசாவது நிச்சயம்.

கலாமிடம் ஒரு குழந்தை கேட்ட கேள்வியும், அதற்கு கலாம் அளித்த குழந்தைத் தனமான பதிலும். இவரின் அறிவுத் திறமையை மெச்சிக்கொள்ளுங்கள்!!

# செய்தித் தாள்கள், இன்றைய தங்கம் விலை அப்படீன்னு கட்டம் கட்டி செய்தி போடுவதுபோல, 'இன்றைய திருட்டுப் பட்டியல்' அப்படீன்னும் ஒரு கட்டம் கட்டிக்கலாம்! "ஆந்திரா பக்கம் ஓடிட்டானுங்க" அப்படீன்னு கடவாய்ல கட்டியிருக்கிற தங்கப் பல் தெரியுறமாதிரி இளிச்சிக்கிட்டே சொன்னாங்க. போறபோக்கப் பாத்தா போயஸ்லயே பொந்து போட்றுவானுங்க போலிருக்கே?!

# அணு உலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: ஊட்டியில் அப்துல் கலாம் பேட்டி.

இந்த மனிதகுல மாணிக்கம் ஒரு இஞ்சினீயரா இருந்ததுக்கே இந்தப் பீட்டர் உடுதுன்னா, உண்மையிலயே சயின்டிஸ்டா இருந்திருந்தா என்ன பாடுபடுத்தும்? ம்ஹூம். இனிமே தாங்காது. பொடிபயல்களை விட்டு, இவர் படத்துக்கு ஹிட்லர் மீசை வரைஞ்சிடவேண்டியதுதான்!!


# ‘இனிமேல் அணு உலை போராட்டம் வலுப்பெற முடியாது ’ போலீசார் குவிப்பு; தயாராக இருக்க உத்தரவு - தினமலர் நக்கல்.

மிஞ்சிப்போனால் பரமக்குடியில சுட்டதுபோல் சுட்டுப்பொசுக்குவார்களா? இதுக்கெல்லாம் உன்னைப்போல காவிரிக்கரைப் பச்சரிசிப் பிண்டங்கள்தான் பயப்படுவார்கள். பூணூலை காது மடலில் சுற்றிக்கொண்டு வந்து வேடிக்கை பார்!!

# புகையிலை இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்: அப்துல் கலாம்.

நாம் அணுஉலை இல்லாத நாடாக இருக்க போராடுவோம். கலாம் புகையிலை இல்லாத நாடாக மாற்ற முயற்சி எடுக்கட்டும். கலாமால் 'முடிந்தது' அவ்வளவுதான்!

# கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக்கோரி பாரதீய ஜனதா 27-ந் தேதி மாநிலம் தழுவிய போராட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

கூடங்குளம் அணு உலை கட்டிடம் இருக்குமிடத்தில்தான் ராமர் பாலம் கட்டுவதற்கு, ராமர் 'பிளான்' போட்டதாக புராணத்தில் இருக்கிறதாம். ராமர் பாலத்தைக் காட்டி, சேது சமுத்திர திட்டத்தை மூடியதுபோல, இந்த கூடங்குளம் திட்டத்தையும் நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால் உங்கள் கண்களை ராமர் குத்தாமல் விடமாட்டார்!

# பாஸ்டன்: கிரிக்#கெட் வீரர் யுவராஜ்சிங்கிற்கு வந்துள்ள கேன்சர் கட்டி பெரும் அளவிற்கு மறைந்து விட்டதாக டூவிட்டரில் அவரே கூறியிருக்கிறார்.

இப்பத்தானே அமெரிக்காவுல போயி அட்மிட் ஆனாரு. அதுக்குள்ள சரியாகிடுமா? சும்மா 'பப்ளிக்குட்டி' வேலையா இருக்குமோ?! பிர்லா சன் லைஃப் டிவி கமர்சியலை வச்சுப் பார்த்தா அப்படித்தான் தோணுது!!

# 24 சதவீத இந்திய குழந்தைகள் பட்டினி: ஆய்வில் தகவல்.

மரம் நடணும், We can do it, India can do it அப்படீன்னு மனப்பாடமா சொல்லிக்கிட்டே இருக்கணும், கவுந்துப் படுத்து கனவு காணனும், மேல ராக்கெட் பறந்தா அத வேடிக்கை பார்க்கணும், நாடு வல்லரசாகணும்னு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்யணும். இப்படியெல்லாம் செய்தா, தட்டுல சோறு வரும்னு தெரியாது?! கேர்லெஸ் இடியட்ஸ்...

# இத்தாலி குண்டுக்கு பலியான தமிழக மீனவர் ; கடற்கொள்ளையன் என நினைத்து சுட்டனராம் - தினமலர் செய்தி.

பரவயில்ல, கவலைய விடுங்க. இங்க உங்க நாட்டு கவர்மெண்ட்டு தான் நடக்குது. சும்மா உள்ளாற வந்து போங்களேன். டீ, காப்பி, பஜ்ஜி, போண்டா சூடா இருக்கும், சாப்டுப் போலாமே?!

# கலாமின் முகநூல் புதையல் சட்டியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பொன்னான முத்துக்களில் ஒன்று :
Youth of India... have the confidence... "I can do it! We can do it! India will do it!"

Nike செருப்புக் கம்பெனி 'Just Do it... ' அப்படீங்கறான்!

ஒபாமா 'Yes, We can' அப்படீங்கறான்!!

அதாவது, 'என்னான்னு' விஷயத்தை சொல்லாமலே do it, do it, we can அப்படீன்னு சொல்றது ஃபேஷனாப் போச்சோ?

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட்.

I am gonna just do it and will come back!!!

# எங்களால் போரை நிறுத்த முடியாது.
ஏனென்றால்...
எங்களுக்குத் தெரிந்த ஒரே பரம்பரைத் தொழில் இதுதான்!! - வெள்ளை மாளிகை, அமெரிக்கா.


# உண்டு கொழுக்கும் வங்கி...
கூட்டிக் கொடுக்கும் அரசு...
வெறும் தட்டை நக்கும்
விவரமான மக்கள்!!

# ஆற்றோரக் குடிசைகளைக் காலிசெய்ய, குடிசைவாசிகள் செத்தாலும் பரவாயில்லையென்று இரவோடு இரவாக கொளுத்திவிட்டு, காலையில் ஒன்றுமே தெரியாததுபோல நாடகமாடுவார்கள். வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு கதறும் தாய்மார்களைப் பார்த்து ரசிப்பார்கள். அதே வகையிலான கோழைத்தனத்தைத்தான் அரசே செய்கிறது. காலிகளுக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம்? இதற்கு நாராயணசாமி, தினமலர், கலாம் போன்ற கருங்காலிகளும் உடந்தை.எட்டு மணி நேரமான மின் வெட்டு செயற்கைத்தனமானது. எட்டு பதினாராகலாம். இந்த புகை மூட்டத்தில் நாம் மூச்சுத் திணறலாம். இந்த கோழையான மத்திய அரசையும் கொடூரமான மானில அரசையும் மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு மக்களே வருத்தப்படுகிறார்கள். ஆனாலும் நாமே வெல்வோம்!!!

# வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் செயற்கை மின்வெட்டு போன்ற கோழைத்தனமான அரசின் நடவடிக்கைகளையும், கொடூர நிகழ்வுகளையும் தங்களுக்குத் தெரிந்த நேர்மையான மீடியாக்களிடம் எடுத்துச் சென்று விஷயம் வெளி உலக்குத் தெரிவிக்க உதவவேண்டும். வேண்டுமென்றே மின்சாரத்தைத் தடைசெய்யும் அரசு நடவடிக்கையை யாரும் ஹிட்லர் காலத்தில்கூட பார்த்திருக்க முடியாது. இந்தியாவில், அதுவும் தமிழகத்திலிருக்கும் நாங்கள் மிகவும் ஆபத்தான காலகட்டத்திலிருக்கிறோம்!!

# கூடங்குளம் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு நாலு மாசமா பொழுது போகலையாம். மூட்டை முடிச்சி கட்டிக்கிட்டு ஊருக்குப் போவலாமான்னு யோசனைல இருக்காங்களாம்.

பொழுது போகலைன்னா, அந்துமணி-லென்சு மாமான்னு ஒரு குருப்பு இருக்கு. அவுங்ககிட்ட போனீங்கன்னா உங்கள நல்லா குளிப்பாட்டிவிட்டு, நல்ல முறையில கவனிச்சுக்குவாங்க. அந்த வகையில பொழுதைக் கழிச்சிடுங்க. அப்படியும் முடியலைன்னா, அவங்ககிட்ட மட்டும் 'டாட்டா' சொல்லிட்டு, உங்க ஊருபக்கம் பத்திரமா போய்ச் சேருங்க!!

1 comment:

வலிப்போக்கன் said...

# உண்டு கொழுக்கும் வங்கி...
கூட்டிக் கொடுக்கும் அரசு...
வெறும் தட்டை நக்கும்
விவரமான மக்கள்!!

Post a Comment