My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

10.2.13

சிறந்த சண்டைக் காட்சியமைப்பு - விஸ்வரூபத்துக்கு ஆஸ்கர்... எனது முகநூலிலிருந்து... 30

பாமக ஆட்சி பீடத்தில் அமரும்போது மூன்று மட்டுமே இலவசமாக வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ்.

கோடாலி, வத்திப்பொட்டி, கெரசின் கேன்.

000

திரும்பத் திரும்ப ராஜ பக்சே திருப்பதி வருவதற்கு வசதியாகவே
ஆந்திராவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே தற்செயலாக
அமைந்துவிட்டதோ திருப்பதி?
என்னே ஏடுகுண்டலவாடாவின் மகிமை?

திருப்பதி மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால்.... ('இருந்திருந்தால்' என்பதை மூணு தடவை எகோ வாய்சில் படிக்கவும்) மீசை முறுக்கி தொல்லும், சிங்கமும் அல்லாத புலியும் அல்லாத சீமானும், டெசோ ஜோடுதலைகளும் ராஜபக்சேவின் கோவணத்தை அவிழ்த்து, கசக்கி காயப்போட்டு, அயர்ன் பண்ணி, திரும்பவும் அதே இடத்தில் மாட்டி விட்டு ஏர்போர்ட் வரை சென்று வழி அனுப்பி வைத்திருப்பார்கள் என்று சொல்லவந்தேன்!

000

'நாங்களும் உன்னைப்போலத்தான். சேம் பிஞ்ச்,' என ராஜபக்சே வருகையின்போது, தனது விசுவாசத்தைக் காட்டிக்கொள்ளவே குருவை தூக்கில் போட்டிருப்பார்களோ?

000

சரியான தீர்ப்புகளை மதிப்பிடக்கூடியவை, வரலாறும் அறிவியலும் மட்டுமே! ஒரு மனிதனின் சிந்தனை இவை இரண்டையும் சார்ந்திருந்தால் மட்டுமே, அவனால் சரியான தீர்ப்பை அளிக்க முடியும்.

000

உலகம் உருண்டை என்று தன் நெஞ்சுக் குழிக்குள்ளேயே 'முழுங்கிவிட்டிருந்தால்' ஒரு வன்மையான விஷக் கொலை ஏற்பட்டிருக்காது!!! 

உண்மையாயிருந்தும் மௌனமாயிருந்தால்.... அதுவும் பொய்மைதான்.

000

வேலன்ஸ்டைன்ஸ் டே!!! 

அடடே.., தாராளமா கொண்டாடுங்க. கட்டி அணையுங்க. முத்தமிடுங்க. உருளுங்க. பெரளுங்க. ஆனா, அய்யாகிட்ட 'நோ அப்ஜெக்ஷன்' சர்டிபிகேட் வாங்கி பாக்கிட்ல வச்சிக்கிட்டீங்களானு ஒரு முறைக்கு ஓராயிரம் முறை செக் பண்ணிடுங்க! இல்லைன்னா, அனஸ்தீசியா இல்லாம ஆப்பரேஷன் தான்!

000

என் அறிவுக்கு எட்டியவரை, முத்துக்குமார் படத்தை பேனரில் போட்டுத்தான் நாம் தமிழர் கட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வதாக, (அவர்களின் பேனரைப் பார்க்கும்போதெல்லாம்) ஒரு நினைப்பு வந்து தொலைக்கிறது. தப்பா ரைட்டானு தெரியலை!

000

ஜெயலலிதாவை சந்திக்க விரும்புகிறேன், நேரம் கேட்டுள்ளேன்: கமல்.

ஜெயலலிதாவை...!! இங்கன பாருய்யா கமலு. இப்படி மொக்கையா கேக்கப்பிடாது. அப்பாயிண்ட்மெண்டு வேணுமுன்னா ஜெவுக்கு முன்னாடி சிலபல அடைமொழிகளை சேத்து மருவாதையா சொல்லோணும். இல்லேன்னு வச்சிக்கோ, அம்புட்டுத்தேன்!

000

சட்டசபையில் அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் சரமாரி அடி-உதை...

சரி, வுடு! 
ராயப்பன் சார் மிந்தானாத்தே அதிமுக கணக்குல அக்கவுண்ட்டு ஆரம்பிச்சிட்டாருன்னு வச்சிக்க. இப்ப இன்னா செய்வீங்க?!

000

சண்டைக் காட்சிகளின் தத்ரூபமான 'அமைப்புகளுக்காக', வெள்ளை மாளிகையே விருப்பப்பட்டு, விஸ்வரூபத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்ய வாய்ப்புக்கள் அதிகம். மேலிடத்து விவகாரம். ஆனால், இன்னுமொரு 'தமியனுக்கு' ஆஸ்கார் நிச்சயம். 

தமிழன் வெல்க!

000

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது! விஜயகாந்த் கண்டனம்!

பரால்ல... உன்னால முடியலைன்னா விட்டுடு நைனா! 
தோ...., இந்தா அந்தான்னு குஷ்பூ அக்கா செருப்படி வாங்கி, வளர்ந்து வந்துட்டே இருக்காங்க. அடுத்த எலக்சன் முடிஞ்சிதுன்னா டெபினிட்டா அவங்கதான் எதிர்க் கச்சி!

000

'இங்கு குஷ்பு இட்லி கிடைக்கும்' என்று போர்டு போட்ட ஓட்டல்கள் அடித்து உடைக்கப்படும் வாய்ப்பு இருக்குமோ?!

000

தனிக் கட்சிதான் பெஸ்ட் மேடம். நாளைக்கே துவங்கிட்டீங்கன்னா, வரும் எலக்ஷன்ல எதிர்கட்சி அளவுக்கு வர வாய்ப்பு உண்டு. ஒரே நாள்ள ஒருகோடி மெம்பர்கள் உங்கள் கட்சிக்கு வந்துவிட ரெடியாய் இருப்பார்கள். அதே திருச்சியிலயே மானாடு போட்டுறலாம். 

சரி. இப்ப கண்ணைத் தொடைச்சிக்கோங்க. ம். எங்கே சிரிங்க? தட்ஸ் குட்!

000

விஸ்வரூபத்தை எதிர்க்கும் மதத் தலைவர்கள், குஷ்பூவின் விண்டோ ஜாக்கெட்டை துணி போட்டு மூடச்சொல்லி இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. ரசிக்கிறார்களோ?

000

இந்த உலகத்தை விட்டு, சொர்க்கத்துக்குப் போக விரும்புவர்கள் விரைந்துபோகக் கடவது. அவர்களைத் தடுப்பார் யாருமில்லை. எல்லாம் வல்ல இறைவா, உன்னால் முடியாது என்பதால், நாங்களே இந்த நரகத்தை சொக்கமாக்கிக் கொண்டுவிடுவோம்.

000

விஸ்வரூபம், படம் எப்படி எடுக்ககூடாது என்பதற்கு ஒரு உதாரணம் - 'சொம்பு' சரத்குமார். 

இவர் வேட்டி கட்டுவது, வெறும் விளம்பரப் படத்தில் மட்டும்தான் என்பது இன்றைய தேதிக்கு உலகமே அறிந்துகொண்டுவிட்டது!! பரம சிவன், கழுத்து, பாம்பு... அடத்த் தூ...

000

கடந்து வந்த நம் பாதைகளில், கடந்துபோன சில 'வாத்தியார்களை' நம்மால் மறக்க இயலவில்லை! எனக்கு அந்தோணி சார் என்று ஒரு அறிவியல் வாத்தியார். அவர் இருக்கும் திசைக்குத் திரும்பி, இன்றும்கூட "வணக்கம் சார்," என்று சொல்லத் தோன்றுகிறது. அறிவியலை என் பாக்கெட்டுக்குள் ரூபா நோட்டை செருகுவதுபோல கற்பித்தவர். 

அந்தோணி சார்...

000

தமிழ்ப் படவுலகை ரட்சிக்க வந்த கர்த்தருக்கு (கர்த்தரோட சொந்த வாக்குமூலம்தான்!) வந்த சோதனை. 

கர்த்தரே... கர்த்தரே... எங்கள எங்க நீ கூட்டிப் போற?!

000

"அடியே..., அடியே..., என்ன எங்க நீ கூட்டிப்போற...?" 
பாட்டைக் கேட்டீங்களாண்ணே?
ப்ளடி..., குரலை ஏத்தி இறக்கி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து... 
சுடுகாட்டுக்கு, அரிச்சந்திரனுக்கு முன்னால, பிணத்துக்கு வழி விடக்கேட்டு, ஒத்தைப் பறை இசையில் பாடுவதுபோலிருக்கு. 
அடங்க... இதையும் காப்பியடிச்சிட்டீங்களாடா?!

1 comment:

Anonymous said...

நல்ல பதிவு..

Post a Comment