My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

9.8.13

தலைவா... தலைவா... எனது முகநூலிலிருந்து... 32

## தன்னோட படம் வெளியாகவில்லையென்றால் நான் அமெரிக்காவுக்கு ஓடிப்போய்விடுவேன் என்று ரோஷத்தோடு சொன்ன தமிழ்த் திரைத் தூண், தன் சகநடிகன் அதே போன்றதொரு பிரச்சினையில் இருக்கும்போது ஒரு மாரல் சப்போர்ட்டாக ஒரு சின்ன தும்மலைக்கூட தும்மவில்லை. கமல் சுயநலவாதியாக நடிக்கவில்லை; வாழ்ந்து காட்டுகிறார்.

## ஒரு பிரஸ் மீட் போட்டு, அம்மாவிடம் ஒரு பகிரங்க மன்னிப்புக்கேட்டுவிட்டு, வடிவேலு இருபத்து நாலே மணி நேரத்தில் திரும்பவும் நடிக்க வந்துவிடலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

ஆனால், தலைவா ஓடவேண்டும் என்பதற்காக அப்பனும் மகனும் இனிமேல் யார்யார் காலிலெல்லாம் விழப்போகிறார்கள் பாருங்கள். (குசேலன் எனும் ஒரு தருத்திரப் படம் கர்நாடகாவில் வெளிவரவேண்டும் என்பதற்காக, ரஜினி கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்டு பல்ட்டி அடித்தது நினைவிலிருக்கிறது).

வடிவேலுதான் ஊருக்கெல்லாம் உண்மையான ஹீரோ.
'இதுகள்' எல்லாம் வெறும் வெத்துவேட்டு ஜீரோ!


## இனிமே, திரைக்கதை எழுதி, ஹீரோவை தேர்வு செய்த கையோட, ஏமாளி மக்கள் மனசுல ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, படத்தைப் பப்பிளிசிட்டி செய்ய, இன்னொரு கதையையும் ரெடி செஞ்சு வச்சுக்கணும். பிற்பாடு, திரைக்கதையை இயக்கணும்; பப்ளிசிட்டி கதையை தைரியமா பப்ளிக்குல வுடணும். 

திரைக் கதையை விட பப்ளிசிட்டி கதை பக்காவா சும்மா தில்லா இருக்கணும். சாதி மதக் கலவரம் இருந்தா இன்னும் விசேசம். கலக்சனுக்கு உத்தரவாதம் இதுதான். தசாவதாரம், தலைவா எல்லாம் ஒரு முன் மாதிரிகள். வாழ்க வளமுடன்.

##  கோட்டையிலும், பாராளுமன்றத்திலும் நிற்பது போலவும், நாளைய, வருங்கால போன்ற அரசியல் வார்த்தைகளை யூஸ் பண்ணக்கூடாது என்றும் தலைவர் அறிக்கை விட்டு இருக்கிறார். அவருக்குத்தான்எவ்வளவு பெருந்தன்மை? அது அவரின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது. 
அஜீத்துக்கு வருமா இதுபோன்ற பணிவு?!

ஆனால் தொண்டர்கள் எனும் முறையில், தலைவர் கோட்டையின் முன்னால் நிற்பதுபோல ஒரு படம் போட்டு, 'வருங்கால முதல்வரே' என்று போஸ்டர்கள் அடித்து ஒட்டுவோம்.

தலைவர் பாராளுமன்றத்துக்கு முன்னால் நிற்பதுபோல ஒரு படம் போட்டு, 'வருங்கால பிரதமரே, ஜனாதிபதியே' என்றும் போஸ்டர்கள் ஒட்டுவோம்.

வெள்ளை மாளிகை முன்னால் நிற்பதுபோல ஒரு படம் போட்டு, 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே' எனும் போஸ்டர் போட்டு தெருவுக்குத் தெரு, சந்துதுக்குச் சந்து ஒட்டி வைப்போம்.
ஒரு மூத்திரச் சந்தைக்கூட விட்டுவிடக் கூடாது.

மேலும் நற்பணி மன்றக் கழகக் கண்மணிகள் யாவரும் குடும்பத்துக்கு ஒரு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, ஐ-நாக்ஸ் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து தலைவரை மகிழ்விக்க வேண்டும். எவன் குண்டு வைக்கிறான் என்று ஒரு கை பார்த்துவிடலாம்.

அப்படியும் குண்டு வைத்து, வெடித்து நாம் உயிரிழந்தால்...,
நம் உடல் மண்ணுக்கு;
உயிர் தலைவருக்கு;
சோத்துப் பானை, அண்டா குண்டா, துருப் பிடித்த பீரோலு எல்லாம் தலைவரின் அப்பனுக்கு.

வாழ்க வருங்கால அமெரிக்க ஜனாதிபதி. 

## உடனடியா ரவுடி ஆகணும்னா, ஒரு பத்து ரூவா கட்டிட்டு பாமகவுல உறுப்பினர் அட்டை வாங்கிடுங்க. கல்லால் அடிப்பது, கம்ப்யூட்டர் உடைப்பது, கொட்டாய் கொளுத்துவது போன்ற ரவுடித் தொழில் நுட்பங்களை அவங்களே இலவசமா சொல்லிக் கொடுப்பாங்க.

## ஒரு அப்பார்ட்மெண்ட் லைஃப் 35 வருஷம்தானாம். ஒரு பிரபல பில்டர் செய்தி விவாதத்தில் போட்டு உடைத்தார்.

ஒரு மனக் கணக்கு : 

ஒரு சிங்கிள் பெட் ரூம் 25 லட்சம்னு வச்சிக்குவோம்.

35 வருஷத்துக்கு, தோராயமாக, 365 X 35 = 12775 நாட்கள்

ரூ.25 லட்சத்தை 12775தில் வகுத்தால் 196 ரூபாய். ஒரு நாளைக்கு.

196 நX 30 நாட்கள் (ஒரு மாதத்துக்கு) 5880.

சிங்கிள் பெட் ரூமுக்கு ஒரு மாசத்துக்கு சொந்த செலவு ரூ.5880.

மொத்தத்துல சொந்த செலவுல சூனியம்.

## 1. சென்னை மெட்ரோ ரயில் விபத்துக்களில் போதிய பாதுகாப்பு உபகரணமின்றி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த உழைப்பாளிகளுக்கு கோயம்பேடு ரயில் நிலையத்தில் ஒரு நினைவுத் தூண் அமைக்கப்பட வேண்டும். 

2. மேலும் பசியாலும் பட்டினியாலும், தாகத்தாலும், வெயில் மழைக் கொடுமைகளிலும், கூலி ஏய்ப்புகளிலும், இரவு பகல் பாராமல் உழைத்து ரயில் பாதைகளை உருவாக்கிய வட இந்திய தொழிலாளர்களின் நினைவாக ஒரு உழைப்பாளர் சிலையும் கோயம்பேடு ரயில் நிலையத்தில் வைக்கப்பட வேண்டும். 

அதுவும் முதல் ரயில் வெள்ளோட்டம் விட ரிப்பன் வெட்டுவதற்கு முன்னால் அமைக்கப்பட வேண்டும்!

## தலைவர்...தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்... சுப்ரமண்யசாமி ஈகைப் பெரு நாள் வாழ்த்துச் சொல்லுவதுபோலவே நினைக்கத் தோன்றுகிறது! மனசுல ஒட்டலை வாத்தியாரே.

## இந்தியாவா அல்லது அமெரிக்காவா அப்படீன்னு ஒரு 'ஜனநாயக' வாக்கெடுப்பு நடத்திப் பாருங்க....?

மாம்பலம், மயிலாப்பூர், வேளச்சேரி, திருச்சி சிரிரங்கம் அத்தனை ஏரியாரியாவிலும் நூத்துக்கு நூறு சதவிகிதம் வாக்கு விழுந்திருக்கும்.

வண்ணாரப்பேட்டை, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, குணகரம்பாக்கம்... இந்த ஏரியக்களில் ஓட்டு பூத்து மொத்தமும் காத்து வாங்கும்.

அறிவாளித் தனத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் ஆன ஆக மொத்த வித்தியாசம் இதுதான். 

## இருட்டுக்கடை அல்வாக் கடைக்கு தொடு திரையில் வழிகாட்டி, 
புளூ டூத்து, 
சர்ரௌண்டு சௌவுண்டு டிடிஸ் சிஸ்டம், 
டில்ட்டு ஸ்டீரிங், 
சென்டர் லாக்கிங் சிஸ்டம், 
தூரல் போட்டால் தானே இயங்கும் வைப்பர், 
கால அளவைக்கேற்ற ஏர்-கண்டிசன், .... 
இத்தனைக்கும் நடுவில் இன்றைக்கும்கூட, ஹெட் லைட் டூமிற்கு தார் கேனைத் தூக்கிக்கொண்டுவந்து புள்ளி வைப்பது என்பது, அட்வான்சுடு ஆட்டோ-மொபைல் எஞ்சினீரிங் தொழில் நுட்பத்தையே கேவலப்படுத்துவதாக இருக்கிறதே?!

## அட்றா அவள
வெட்றா அவள...

காதலிக்க மறுக்கும் பெண்களையெல்லாம் தேடிப்பிடித்து வெட்டிக் கொலை செய்யச்சொல்லி, இளைஞர்களைத் தூண்டிவிடும் பாடல். பெண்களைக் கொச்சைப்படுத்தி, கொடுமையான வார்த்தைகளால் வன் கொடுமை செய்யும் பாடல்களாகப் பார்த்துப் பார்த்துப் பாடி, ஹிட் ஆவதில் தனுஷ் முதன்மையானவர். ஆனாலும் இந்த சோப்ளாங்கிக்கும் காதல் வந்தது. கணக்குப் பார்த்து, பணத்துக்குப் பணம் பொருந்திவந்ததால், ரஜினியும் எதையும் யோசித்துப் பார்க்காமல் சம்மதம் கொடுத்துவிட்டார்.

சந்துருவும் தனுஷ் போல ஒரு பெரிய நடிகனாய் இருந்தால், சேரன் தன் மகளின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கலாம். ஏனென்றால் ஹோரோக்களின் பொறுக்கித் தனங்கள் சினிமாவில் சட்டை செய்யப்படுவதில்லை! பொறுக்கித் தனமாவது, சாதியாவது, மதமாவது...

## நாம் தமிழர் கட்சி அபரிமிதமாக வளர்ந்துந்துகொண்டே வருகிறது. 

'போட்டோஷாப்' மட்டும் இல்லையென்றால் கட்சியின் வளர்ச்சியில் ஒரு எண்பது சதவிகிதம் குறைந்துபோயிருக்கும். 

தமிழர்களின் சார்பாக, நன்றி போட்டோஷாப்...!

## லார்டு லபக்கு ரோடு....

இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் ஏதாவது ஒரு நீண்ட நெரிசலான சாலைக்கு வலுக்கட்டாயமாக எம்.ஜி ரோடு (மகாத்மா காந்தி ரோடு) என்று நாமகரணம் சூட்டி இருப்பார்கள். அத்தகைய முக்கியமான 'கமர்சியல்' சாலையில்தான் நைக், ரீபாக், ரோலக்ஸ், லா-கோஸ்ட் போன்ற மேலை நாட்டு நுகர்வுப் பண்டங்களின் ஷோரூம் ஜகஜ்ஜோதியாய் ஜொலித்துக்கொண்டிருக்கும். இந்த 'மகாத்மா காந்தி ரோடு' என்று எழுதியிருக்கும் பலகையில் கரியைப் பூசி விட்டு, ஏதாவது 'லார்டு-லபக்கு' இங்கிலீஷ்காரன் பேரை வைத்தால் பொருத்தமாக இருக்கும்.

## "ராமதாஸ், அன்புமணிக்கு 24 மணி நேர, போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை; அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை' என, சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை இந்தக் கும்பல்தான் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. இவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க கனம் கோர்ட்டார் அவர்கள் உத்தரவிடவேண்டும்!

No comments:

Post a Comment