My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

17.6.11

ஈழப் படுகொலை ஈன்றெடுத்த வீரம்


ஈழப் படுகொலை ஈன்றெடுத்த வீரம்

“கொல்;
கொன்றுவிடு;

கொன்றே அவனை
கூறு போடு!”
“இல்லை,
இல்லவே இல்லை;
நில்; நில்.
நில் சற்றே;
அவனைக் கொல்லாதே;
கொன்றுவிடாதே…!”
“ஏன்?
ஏ மனிதா…!
ஓ…,
உன் உள் மனம்
உறுத்துகிறதா?”
“இ…
இல்லை…
இல்லவே இல்லை.”
“சொல்.
சொல்லிவிடு.
யார்,
யாருக்காக
இந்த பயம்?”
“முள்ளி வாய்க்கால்
தென்னை மரத்தில்
கையுங்காலும் கட்டிவைத்து,
கத்தியொன்றால்
கழுத்தறுத்தும்…
அந்தத் தமிழிளைஞன்
ஆற்றியேதும் பதறவில்லை.
கண்ணீரால் கபடமிட்டு
கத்திக் கதறவில்லை.
அவன் மட்டும் -
ஆற்றாமை தாங்காமல்,
கண்ணீர் மல்கி,
கதறியழுதால்……
பின் பதம் பார்த்து
கழுத்தறுத்தே
கொலை செய்வோம்.”
“நடவாது;
நடக்கவே நடக்காது;
அவன்
அழமாட்டான்…!
அதனால் கத்தியெடு.
கழுத்தைக் கிழி.
அவனைக் கொன்று
கூறு போடு.”
***
“குறி பார்.
கொலை செய்.
பத்தடி தூரத்தில்
பனங்கொலைக் குவியல்போல்
கொத்துக் கொத்தாய்
கொய்து போட
கத்தைக் கத்தையாய்
காத்திருக்கும் தலைகள்.
கைகளையும் கண்களையும்
கட்டிபோட்ட நிலையில்;
நினைவு தப்பாமல்
நிர்வாணமாய்!
சுடு.
கூர் பார்த்து.
குறி பார்த்து.
வீரம் பழக,
சுடு.
கிட்டத்தில் சுட்டு
வீரம் பழகு.”
“இல்லை;
இவர்களுள் பயமில்லை;
பின்னந்தலையில்
படபடவென்று சுட,
அது வீரமுமில்லை.
அத்தனை கண்களிலும்
கண்ணீர்த் துளிகளில்லை;
கதறியழுதோர் யாருமில்லை.”
“நடவாது;
நடக்கவே நடக்காது;
அவர்கள்
அழவேமாட்டார்கள்…!
அதனால்
அவர்களைக் குறி பார்.
பின்னந்தலைப் பிடரிகளை
பிள.
குருதிப் பீரிட
குறுந்தூரத்துக் குறியில்
உன் வீரம் பழகு.”
***
“புணர்.
பிணமென்றாலும்
புணர்ந்துவிடு.
புதிய பிணம்.
புது அழகு.
குதறிக் குதறி
குறிபார்த்துப் புணர்ந்துவிடு.”
“இல்லை;
இந்தப் பிணத்தின்
கண்ணோரத்தில்
கண்ணீரில்லை.
அவளைப் புணர்வதில்
அர்த்தமில்லை…!”
“நடவாது;
நடக்கவே நடக்காது;
அவள்
அழமாட்டாள்…!
அவளின் கண்களில்
கண்ணீரில்லை;
அவளுடலில் உயிரில்லை.
ஆனாலும்
அதைப் புணர்.
அதனின் குறியில்
குறிபார்த்து…!”
***
“சரிதான்;
சாவைச் சந்திக்க
கையறு நிலையிலும்
கை தூக்கியவர்களை
குறி பார்த்துச் சுட்டோம்;
குறி பார்த்துப் புணர்ந்தோம்.
இருப்பினும் -
தமிழகத்து
தொப்புள்கொடிகள்
துவண்டு போகாதா?
தானைத் தமிழன்;
தன் குடிவளர்த்த
தற்குறி தமிழன்;
மூத்தப் பெருங்குடி;
முத்தமிழ் வித்தகன்;
நாம் தமிழர் அல்லது
நாம் அல்லாத தமிழர்;
விடுதலைச் சிறுத்தைகள்;
விட்டுப்போன சிங்கங்கள்;
தங்கத் தாரகையின்
தவிக்கும் இரத்தங்கள்;
இந்தியா முழுதும் காணும்
மெழுகுவர்த்திப் போர்கள்;
தும்பை விட்டுவிட்டு
வலிய வந்து வால் பிடிக்கும்
தூங்கிவழிந்த
தூரத்து ஐக்கிய நாடுகள்;
இத்தகையோர் கையுயர்ந்தால்
யாம்
இல்லாமல் போய்விடுவோம்.”
“சீச்சீ…
சற்றும் பதறாதே
மா வீரா,
நீ நம்பு.
இத்தனை வீராப்புகளையும்
கோத்தபய ராஜபக்சே
கொத்துக் கொத்தாய்
கைக்குலுக்கி
உச்சி மோந்து
வீரம் அடக்கி,
நட்சத்திர அறைகளில்
அடைத்து வைத்து
அமைதி காண்பார்.
அதையும் மீறி
அத்து மீறினால்,
தின் பண்டங்களாலும்
தே நீர்க் கோப்பைகளாலும்
திகட்டவைத்து
திருப்பியனுப்புவார்.
அதையும் மீறினால்
அவர்களின் இருப்பிடமே சென்று
அளவளாவி விட்டு,
திருப்பதி சென்று
தியானம் செய்துவிட்டு,
தடையேதுமின்றி
தடபுடலாக
தாயகம் திரும்புவார்.
ஆதலால்,
என்றோ ஓர் நாள்,
யாரோ சிலரால்,
நம் கைகள் கட்டப்பட்டு
நீதி கேட்கப்படும் வரை…
நீ
பிடரியில் சுட
இடரிலிருக்கும்
தமிழனைத் தேடு.
குறி பார்த்துச் சுடு.
பிணமாக்கு.
குறி பார்த்து
பிணத்தைப் புணர்…!”
- புதிய பாமரன்.

1 comment:

Anonymous said...

superrrrrrrrrrr

Post a Comment