My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

25.12.11

விடுகதைகள் விடைபெறலாம்



வானென்றும் பார்;
வெகுண்ட வளியென்றும் பார்;
நன் நிலவென்றும் பார்;
நீள் நதியென்றும் பார்;
சேர் முகிலென்றும் பார்;
சின்னஞ் சிறு பறவையும் பார்;


அண்ட வெளியென்றும் பார்;
அகண்ட அகிலென்றும் பார்;
பூக்கும் புவியென்றும் பார்;
புத்தம் புதுவண்டம் பார்;
காக்கும் கானென்றும் பார்;
காட்டாற்று வெள்ளமும் பார்.


ஏதில்லையோ ஏய் மனிதா?
ஈதில் ஏதுங்குறை கண்டாய்?
யாதும் பொது; யாவர்க்கு மெப்போதும்;
எக்காலும் இவை நமக்கே!
தீதாகா இவை நமக்கு
தீர்ந்திதைப் பகுத்தால்.


ஆய்; அனைத்தும்;
ஆங்கொன்றையும் விடாமல்.
ஏவி மேய், எவ்வுலகும்.
அறிவினப்பாலுள்ளதை அறி.
அறிதலின் தெரிதலால்
அண்டம் விளக்கு.

இறை யாதென் றியம்பு.
இலையென்றால் தெளி.
இயற்கையில் புரள்.
ஏதொன்றையும் பயில்.
தீதையும் நன்மையும்
தீர்த்துப் பகுத்துவிடு.
ஈவு இருப்பின் தயங்காது
இன்னு மறி; இன்னு மறி!


பசி ஏன்; பணம் ஏன்;
பாராளும் ஆதிக்க மேன்;
கூனும் பாமரம் ஏன்;
கூர்பார்க்கும் ஆயுதமேன்;
வானிலும் வாணிக மேன்;
வர்க்கம் பேதம் ஏன்;
மதம் ஏன்; மார்க்கம் ஏன்;
மனிதத்தில் மிருகமேன்...


ஏன், ஏன், ஏனென்று,
எப்பொழுதிலும் வினவு.
வினவெனும் ஆயுதத்தால்
விடுகதைகள் விடைபெறலாம்.
தொடர்கதைகள் தடைபடலாம்.
தோட்டாக்கள் புறமிடலாம்!

No comments:

Post a Comment