My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

28.12.11

கதைகளுக்குள் மறைந்துகொண்ட கண்ணீர்த்துளிகள்



"ப்ளீஸ், ப்ளீஸ், கடவுளே
கொஞ்சம் கருணை காட்டேன்.
ராமனின் காலடி பட்டுத்தான்
அகலிகை எழுந்திருக்கவேணுமுன்னா
அவ கல்லாகவே கெடக்கட்டும், சாமீ!"
பொருமிக்கொண்டாள்
பாவப்பட்ட சீத்தாதேவி.

000

வள்ளுவன் குரலுக்கு
வாசுகி ஓடிவந்தாள்.
அந்தரத்தில் ஆடியது
தண்ணீர்க் குடமும்
பெண் சுதந்திரமும்.

000

அஞ்சு பேருக்கும் சம்மதமுன்னா
அத்தனை பேருக்கும் பொண்டாட்டி.
தொட்டுக் கும்பிட்டுக்க…
அவதான் பாஞ்சாலி.

அஞ்சுக்குள்ள ஒருத்தனைத்தான்
அணைத்துக்கொள்ள பிடிக்குமுன்னு
அவளாவே புலம்பியிருந்தாலும்
அவ மாபாதகி பாஞ்சாலி.
மத்த நாலு பேருக்கும் வப்பாட்டி.

நல்ல வேளை.
நாசூக்காக் கூட
அந்தப் பாஞ்சாலி
அப்படியேதும் சொல்லிக்கலை.
மென்னு முழுங்கிக்கிட்டதால
மகாபாரதப் பொஸ்தகத்துல
கருணைக்கொலை ஏதும் இல்ல.

No comments:

Post a Comment