My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

13.2.12

எனது முகநூலிலிருந்து... 2




# செத்த பிறகும் நிம்மதியாயிருக்கலாம் எனப் பேசி மடக்கும் இன்சூரன்ஸ் ஏஜண்டுக்கும், இந்தியா வல்லரசாகிவிடும் என்று கடிவாளத்துக்கு முன்னால் கேரட் காட்டும் அப்துல் கலாமுக்கும் என்ன வித்தியாசம்?


கடலோர காவல் படையினரின் சாகச நிகழ்ச்சி: இந்திய கடலோர காவல்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடல் அருகே, கடலோர காவல் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது - செய்தி.

பார்த்து, பார்த்து! ஹெலிகாப்டர் பத்து அடி அந்தண்ட போய்டுத்துன்னா, வாய்ல இருக்கிற பல்லெல்லாம் கொட்டிப்போய்டும். உசாரா இருங்க!



# ஓட்டளிப்பதை சட்டப்படி கட்டாயமாக்குவது முக்கியம்: அத்வானி.

கட்டாயப்படுத்தினா, 'ஊழலில்லா ஆட்சி அமைப்போம்னு' நீ சொல்ற வாக்குறுதிய காப்பாத்தியே ஆகணும்னு நாங்களும் 'கடுமையான' முறையிலே உங்களை கட்டயப்படுத்துவோம். ஜன நாயகக் கடமை எங்களுக்கு மட்டும்தான்னு நீங்க நினைச்சிக்கிட்டிருக்கீங்களா? பெர்சு... அதெல்லாம் அந்தக்காலம்!!


# "ஊழல் முடிவுக்கு வராத நிலையில் அறைவதைத் தவிர வழியில்லை': ஹசாரே.

அப்போ காந்தீயம்? கோய்ந்தாவா? கிரவுண்டுல இருக்குற 200 பேருகூட காணாமம் போய்டுவாங்க போலிருக்கே?!


புதுடில்லி: "நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. வீடுகள் இல்லாத மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தற்காலிக தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடன் தொல்லையால் விவசாயிகள் கொடுமையான முறையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு வலிக்காதவகையில் தற்கொலை செய்துகொள்ள, மத்திய மானில அரசுகள் வசதி செய்து தரவேண்டும் - சுப்ரீம் கோர்ட். (இப்படி செய்தி இருந்து நீங்கள் கோபப்படுவீர்களானால், தவறென்று சொல்வீர்களானால், மேலே உள்ள உண்மையான செய்திக்கும் நீங்கள் கோபப்படவேண்டும்).


# இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று இந்திய அமைதிப் படை வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் - செய்தி.

கார்கில் சண்டை மாதிரி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடந்தது நாடுபிடிச் சண்டை. அதுல நம்ம ராணுவ வீரர்கள் வீரத்துடன் போராடி, தப்பிச்சு வரமுடியாம, இலங்கையிலே உயிர் விட்டுட்டாங்க. அதனால இந்திய வீரர்களின் நினைவிடத்துல கலாம் அஞ்சலி செலுத்துறார். இப்பவாவது புரிஞ்சிக்கோங்கையா... அவர் மெத்தவும் படித்தவர்னு! மனிதாபிமானின்னு!!


# "சொன்னது உண்மையாகிப் போச்சு... இப்போ! கூடங்குளத்திற்கு வந்தது வெளிநாட்டு நிதிதான்!" - தினமலர் கூவல்.

மனித இனத்தை அழிக்க வெளி நாட்டிலிருந்து 'தொழில் நுட்பம்' வரலாம். ஆனால் மனித இனத்தைக் காக்க வெளிநாட்டிலிருந்து நிதி வரக்கூடாதா? வெளிநாட்டில் மனிதாபிமானிகள் இருக்கக்கூடாதா?


# "ஓட்டுப்போடுவது ஜனனாயகக் கடமை."
ஆனா, பதவிக்கு வந்துட்டா அவங்க கடமையை செய்யறதில்லை.

அதே போலத்தான் இந்தக் கூடங்குளத்துக் கதை.

"நாட்டுக்காக இதைத் தாங்கிக்கணும். நாடு, அதன் இறையாண்மை, அதன் பொருளாதாரம் முக்கியம்."

உற்பத்தி ஆரம்பிச்சாச்சுன்னா, அம்பானியோட கரண்ட்டு பில்லு எடுத்துக்கிட்டு, பணம் வசூல் பண்ண ரவுடிங்க ஆட்டொவுல எப்புடி வருவாங்கன்னு அரசாங்கத்துக்கும் அப்துல் கலாமுக்குமே வெளிச்சம். கரண்ட்டு பில்லு கட்ட முடியாததால, கனக்ஷன் கட் பண்ணி இருட்ல இருக்குறதவிட, ஆரம்பத்துல இருந்தே இருட்ல இருக்கப் பழகிக்கலாம். காசு மிச்சமில்ல!! மிஸ்டர். கலாம். பதில் சொல்லிட்டுப் போங்க!

 # ஆட்சிக்கு வந்தால் கோமியம் உற்பத்தியை ஊக்குவிப்போம் : பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இப்படியும் வாக்குறுதி

மாற்றத்தை காணாமல் ஓய மாட்டேன்: ராகுல் சூளுரை.

வந்தா அடக்கக்கூடாது. சிரிச்சிடுங்க. ஒடம்புக்கும் நல்லது! மனசுக்கும் நல்லது!! நெக்ஸ்ட்டு யார்ரா ஜோக்கு சொல்லப்போறது?

# “100 ரூபாய்க்கு தெர்மாகோல், ஒரு ஃபெவிகுயிக், கத்திரி, கட்டர் இத்தியாதி வாங்கிக் குடுங்க சார்… அப்படியே அணுவுலைக்கூடம் எப்படி இருக்கும்னு ஒரு டம்மி செய்ஞ்சி காட்றேன். அப்பத்தான் புரியும்… அதுல எவ்வளவு ஆபத்திருக்குன்னு,” அப்படீங்கறான் ஒரு +2 பையன். ஆனா, கலாம் கண்ண மூடிக்கிட்டு எல்லாரையும் முட்டாளா நெனைக்கிறார். இவுரு இன்னும் கட்டை வண்டி காலத்துலயே இருந்தா அதுக்கு யார் பொறுப்பு?!


# அ.தி.மு.க., எங்கள் இயல்பான கூட்டணி: அத்வானி.

'இயல்பு' என்பதற்கு அர்த்தம் காவி. ஆம் ஐ கரக்ட் அத்வானிஜி?

# புதுச்சேரி, கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், 96 லட்சம் ரூபாய் செலவில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, போர்வைகள் வழங்கப்படுகின்றன - நித்தி.

பெண்களே, கையை நீட்டாதீங்க. எதுக்கும் 'எட்ட' இருந்து குச்சிய நீட்டி வாங்கிக்குங்க. குடுக்குறதுபோல குடுத்து நோட்டம் பார்த்துடப்போறான்!

2 comments:

Sankar Gurusamy said...

சூடான பகிர்வுகள்... தொடர்ந்து பகிருங்கள்..

http://anubhudhi.blogspot.in/

Anonymous said...

வழக்கு.கோர்ட்னு இலலாம அவிங்கள கொல்லலாம்னு தீர்ப்பு அளித்திருநதா நல்லா இருக்கும்

Post a Comment