My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

16.12.12

இன்னோவா ஓனர்ஸ் பிரைட். வைகோஸ் என்வி! எனது முகநூலிலிருந்து... 25

இன்னோவா
ஓனர்ஸ் பிரைட்.
வைகோஸ் என்வி!

இன்னோவா டிக்கியில்
மூட்டை கட்டி வைத்து,
இழுத்து மூடப்பட்டது...
இது நாள் வரை
மூச்சுவிடாமல் பேசிய
வீராப்புப் பேச்செல்லாம்!

000

ஒரு நாட்டுக்கு யார் தலைவராக வர வேண்டும், யார் ஆள வேண்டும் என்பது விதிப்படி, தலையெழுத்துப்படியே நடக்கும். அரசியலில் நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம் - கழிசடை ரஜினி. 

இளைஞர்களின் மூளையை மழுங்க வைப்பதில் கஞ்சா, டாஸ்மாக் சரக்கை விட முதலில் நிற்கும் போதைப் பேச்சாளி. நமக்கு எதிரி வேறு எங்கோ இல்லை; நம் கண் முன்னே, 70 எம்எம் திரையில்!

000

ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைத்து 30 நிமிடம் மாணவர்கள் படிக்க வேண்டும் : அப்துல் கலாம் "அட்வைஸ்'

அவனவனுக்கு இந்தியாவுல ஒண்ட குடிசையில்லை. இந்த நாரப் பொழப்புல, வூட்டுக்குள்ற நூலகமாம். தலைல தொங்குற முடிதான் கலாம் கண்ணை மறைக்குதுபோல. கிராப்பு வெட்டிட்டாருன்னா, அவருக்கு எல்லாம் விவரமா வெளங்கிடும்!

000

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பிலிருந்த எஸ்.ஐ.,யை, அ.தி.மு.க.,கவுன்சிலர் சின்னையன் கன்னத்தில், "பளார்' என அறைந்தார். "கூட்டத்தில் தெரியாமல் நடந்துவிட்டது. பிரச்னையை பெரிதுபடுத்தாதீர்கள்' என சின்னையன், பிறகு போலீசாரிடம் மன்றாடினார். 

ஒரு சக மனிதரை பொதுவில் வைத்துத் தாக்குவது என்பது காட்டுமிராண்டித் தனம்!
முதல்வரைப் பாதுகாக்கும் பணிலிருந்த காவல்துறை அதிகாரிக்கு பாதுகாப்பில்லை. அந்தக் கவுன்சிலரின் அதிகாரக் கொழுப்பு கண்ணை மறைக்கிறது. காவல்துறை அதிகாரி கவுன்சிலரின் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்து தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தால், கட்சி பேதமற்ற பொதுமக்களின் ஆதரவு கிடைத்திருக்கும்.

000

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கும், உயர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவும் இந்த ஆண்டு சில கசப்பான மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர வேறு வழியில்லை - சிதம்பரம்.

ஆனா, மருந்தைக் கொடுக்குறது போலி டாக்டராச்சே. அதான் யோசிக்கிறோம்...

000

மார்க்கெட்டிங் டிரெண்டு. : 

ராம நாராயணன் நாய் குரங்குளை வைத்து படத்தில் பணம் பார்த்தார். 

பிரபுதேவா இன்று இவளைக் காதலிக்கிறார், இன்று டைவர்ஸ் வாங்குகிறார், நாளை அவளைக் காதலிக்கப் போகிறார் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தியே தான் டைரட்டு செய்த படங்களை ஓட்டிவிட்டார். 

சிம்பு எனும் குரங்கு சினிமாக் கிளையில் தொங்கிக்கொண்டிருப்பது 'பெரிய இடத்து' கிசுகிசுவை வைத்துத்தான் (சாரி, தனுஷ்!). 

லாரன்சு தன் குப்பை படங்களை ரஜினிக்கு ஐஸ் வைத்தே ஓட்டிவிடுகிறார். 

ரஜினி ஒரு ஸ்பெஷல் கிரியேச்சர் இல்லியா? அதனாலதான் முதல்வர்களை ஐஸ் வைத்து அதில் குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்!

000


கோபாலபுரத்திற்கும், போயஸ்கார்டனுக்கும்
நான் பொதுவானவன் : ரஜினி.

தெரியுமே.
நீங்க ஒரு ரெண்டுங்கெட்டான்னு நல்லா தெரியும்.
தமிழ் நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் கூட நீங்க பொதுவானவர் ஆச்சே! காவிரி விவகாரத்துல பார்த்துட்டோம்.
இப்ப உங்களுக்கு 3டி சிவாஜி ஓடணும்... அவ்வளவுதானே.
பயப்படாம போயி பார்ல ஒக்காருங்க.
நாங்க பிக்பாக்கெட் அடிச்சாவது உன் படத்தை பார்த்துடுவோம்!

000

ஏண்டா பீடைகளா,
சர்ச் பார்க் கோந்தைகளும், எக்மோர் டான் பாஸ்கோ, பத்துமா சேஷாத்ரி கோந்தைகளெல்லாம் எவ்வளவு சமத்தா ஸ்கூலுக்கு வந்து போறா? அவாள்ளாம் என்ன, உங்களாட்டம் ஃபுட்போர்ட்டு அடிச்சிக்கிட்டா போறா? பாரேன் கொழுப்பை... நாலாம் கிளாஸ் கார்பரேஷன் நண்டு சிண்டு கூட படிக்கட்டில தொத்திண்டு போறது. கொழுப்பு! ஒடம்பு பூரா கொழுப்பு!! ங்கொப்பனாத்தாள ஒரு கார் வாங்கச் சொல்லிட்டு அதுல ஜம்முன்னு ஸ்கூலுக்கு போகப்பிடாது?

000

விஸ்வரூபம் படத்தின் DTH ஒளிபரப்பு ஒரு நிகழ்கால டெக்னாலஜி. தேவர் மகன் படத்தின் கதை ஒரு இருண்ட கால டெக்னிக்.
அவ்வளவுதான்!
ரெண்டுமே 'டெக்னிகலான டெக்னாலஜி'!!
கமல் டெக்னாலஜி!!

000

படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து நீக்கம்.

வேற வழி?

இடம் கிடக்காம, 45 டிகிரி கோணையா சாய்ஞ்சாப்புல போற பஸ் படிக்கடுல தொங்கிட்டுப் போற 'இஸ்கூலு' கொழந்தைங்க மேலதான் கை வைக்கமுடியும்.

'பஸ் டே' அப்படீன்னு மவுண்ட் ரோடுல, பஸ் கூரை மேல ஏறி நின்னு, பத்தாயிரம் பேர் பாக்கிறாப்புல, போதைல, பேருந்துல மோளம் அடிச்சி கூத்தடிக்கிற 'கொழந்தைங்க' மேல கை வைக்க முடியுமா?

அப்பேர்பட்ட கொழந்தைங்
களுக்குப் பின்னால ராவான ரவுடி இருக்கலாம், ரஜினி இருக்கலாம்; தல இருக்கலாம்; விசிலடிச்சான் குஞ்சு விஜை இருக்கலாம்; அய்யா இருக்கலாம்; அம்மா இருக்கலாம்; அப்பா இருக்கலாம்; தாத்தா இருக்கலாம்; பேத்தி பேரன் இருக்கலாம்...

உசுரைவிட ஓட்டு முக்கியம்ணே!

நீதி : கூரை மேல பிரயாணம் ஓட்டு வாங்கிக் கொடுக்கும்.

000

அப்படியே நம்முடைய அண்ணன், கருமை நிறக் கண்ணன், தமிழகத்தின் மன்னன், கர்நாடகாவை கண்டித்து பஞ்ச் டயலாக் பேசி, நார் நாராகக் கிழிச்சி தொங்க விடுவார் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணே, வாங்கண்ணே. வந்து பேசுங்கண்ணே...

000

பேரனோட குவார்ட்டர் கட்டிங் படத்துக்கு வரிவிலக்கு குடுத்தே ஆகணும்கிற ஒரே காரணத்துக்காக 'வ' எழுத்தை பெரிய சைசுல சேத்துக்கலையா? அதுபோலத்தான் இதுவும்.

கலைஞரே... கண்ணாடிய கயட்டிட்டு பாருங்க. குதிரை பறக்குறது தெரியுதா? கணக்கு சரியாப் போயிந்தி!

000

நான் அடைந்த வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது: அமிதாப்பச்சன்

பாவம், இந்தாளு ஏதோ சோத்துக்கு தீண்டாடினா மதிரியோ, பொண்டாட்டிய தவறவிட்ட மாதிரியோ தெரியுதில்லே? சரி. மேல படிங்க...

"இத்தாலி பட விழாவுக்கு சென்றபோது எனது லேப்- டாப்பை தொலைத்து விட்டேன். இதை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். லேப்-டாப் எனது கைக்கு வந்த பிறகுதான் நிம்மதி பிறந்தது. லேப்- டாப் இல்லாமல் நான் அடைந்த வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது."

000

பொதுவுடைமை வேண்டி பராசக்தியிடம் மண்டியிடுவாரு.
இவருக்குமட்டும், காணி நிலம் கேட்டு கண் கலங்குவாரு.
பெண்ணுரிமை பேசி, பாஞ்சாலி பதம் பாடுவாரு.
மடைமையைக் கொளுத்தச் சொல்லிட்டு, குங்குமப்பொட்டோடவே போய்ச் சேர்ந்துட்டாரு.

முற்போக்குச் சிந்தையாளர்கள் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு பாரதி ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

000

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை நேற்றே நிறுத்திவிட்டோம்: சட்டசபையில் கர்நாடக முதல் மந்திரி தகவல்.

ஷட்டர் சாவி அணைக்குள்ள விழுதுடுச்சி. தேடி எடுத்துக் கொடுங்கன்னு கனம் கோர்ட்டார்கிட்ட சொல்லிட்டா, ஒன்ஸ் ஃபார் ஆல், கதை முடிஞ்சிடுமில்லே?

000

"சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வந்தால், இரண்டு ஆண்டுகளில், இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.'' - நாராயணசாமி.

பெட்டிக்கடை, மளிகைக்கடை யாவாரிங்க கடைய ஊத்தி மூடிட்டு, வால் மார்ட்டுல வாட்சுமேன் வேலை, மூட்டை தூக்குற வேலை பார்ப்பாங்க. இதுதான் 'ரெண்டு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு.'
புரிஞ்சுதா?

000

எம்.ஜி.ஆர். சமாதியை ஜெயலலிதா ஏன் திடீர் என்று திறந்து வைத்தார் தெரியுமா? - கருணாநிதி.

எலக்சன் கமிசன் ஒரு பத்து நாளைக்கு தார்பாய் போட்டு மூடத்தான். போதுமா?
இப்ப சந்தோஷம் தானே தலைவா?!

000

ஓலை குடிசையில் ரஜினி சாப்பிடுகிறார் - லாரன்ஸ்...

'சிட்டிக்குள்ள' ஓலைக் குடிசை இருந்துதுன்னா, அதுக்குப் பேரு பார். தண்ணி அடிக்கிற எடம்.
போடாங்...

000



No comments:

Post a Comment