My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

5.8.13

சேரன் உப்பைத் தின்றுவிட்டு தண்ணீர் குடிக்கிறார்...


இந்த சேரனைப் பார்த்து, "ஆட்டோகிராஃப் படம் காதலைத்தானே சொல்லியது? நீங்கள் இந்தக் காதலைப் பிரித்துவிட்டால், எங்கள் மகன் சந்துரு, விக்ரம் சேது போல இளைத்துப்போய், கை கால்களில் சங்கிலி பிணைத்து ஏர்வாடிக்குப் போக நேரிட்டால் அதற்க்கு சேரன் தானே பொருப்பு?" எனக் கேள்வி கேட்டால் சேரனால் என்ன பதில் சொல்ல முடியும்? ஏனென்றால் அவரின் கதை அமைப்புகள் யாவுமே ஆண்களை உயர்த்தியே அல்லவா சொல்லப்பட்டிருக்கிறது?

சினிமாவின் தாக்கங்களால், எத்தனையோ படக்கதைகளை உதாரணங்களாகக் கொண்டு, பொருந்தாக் காதலில் விழுந்து தத்தளித்த இளம்பெண்கள் இந்தத் தமிழகத்தில் மிகமிக அதிகம். சமூகம் எக்கேடும் கெட்டுபோகட்டும்; நமக்கென்ன; நமக்குத் தேவை பணம், புகழ், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்து எனும் கேவலமான குறிக்கோள்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, சமூகக் கேடுகள் நிறைந்த படங்களை வியாபாரத்துக்காகவே வெளியிடுகிறார்கள் இயக்குனர்கள். இத்தகைய கேவலமான புனைவுக் கதைகளில் காதல்தான் முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய கேவலமான சினிமாக் கதை காட்சிகளின் தாக்கங்களாலும், கேரக்டர்களாலும் மன அழுத்தம் கொண்டு பொருந்தாக் காதலில் விழுந்து கருகிப்போன இளம்பெண்கள் தமிழகத்தில் ஏராளம். காதலில் விழுந்த பெண்களின் பெற்றோர்கள் நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்து, புத்திர சோகத்தில் கதறுவதும் இங்கே ஏராளம். அத்தகைய ஏராளமான பெற்றோர்களில் சேரனும் ஒருவர். அத்தகைய பொருந்தாக் காதலில் விழுந்த பெண்களில் சேரனின் பெண்ணும் ஒருவர்.

சேரன், பாலா போன்ற (உயர் ரக?!) இயக்குனர்கள் கூட காதலை ஆண்களுக்கு சாதகமாகவே ஆக்கிவைத்து கதைகளை எழுதுகிறார்கள். அதாவது ஒரு ஆண் கண்ணடித்துவிட்டால், பெண் அவன் பின்னால் சென்றாக வேண்டும். பெண் மறுத்துவிட்டால், காதலன் சோகத்தில் சேதுபோல உருகிவிடுவார். இந்த உலகமே அந்தப் பெண்ணைத் தூற்றும். இயக்குனர்களுக்கு பாராட்டும் பணமும் கிடைத்துவிடும். பெண்களின் நிலை, அவர்களின் பெற்றோர்களின் நிலை, காதல் எனும் மோகத்தால் அலையும் பொறுக்கிகளின் நிலை... இவைகளைப் பற்றி இத்தகைய இயக்குனர்களுக்கு கவலை இருந்ததே இல்லை.

தேர்ஃபோர், செய்த பாவத்துக்காக, சேரன் அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பொருந்தாக் காதலில் விழுந்த பெண்ணின் பெற்றோர்கள் எப்படியெல்லாம் அழுதுத் தீர்ப்பார்கள் என்பதையெல்லாம் அணுவணுவாக அனுபவிக்கிறார். உப்பைத் தின்றவன் தண்ணி குடித்துத்தானே தீரவேண்டும்?!

இன்று சேரன். நாளை பாலாவின் குடும்பத்திலுக் கூட இது நடந்துவிடலாம்.

ஆதாலால் இயக்குனர்களே... காதல் மட்டும்தான் சினிமா எனும் கேவலமான இழிவான ஃபார்முலாவை தூக்கி எறியுங்கள். மார்கழி மாதத்து நாய்களை மரத்தைச் சுற்றவைக்க உங்களைப் போன்ற இயக்குனர்கள் தேவையில்லை.

ஒரு 2ஜி ஊழலைப் பற்றி படம் எடுங்கள்.
ஒரு கோயிலின் கருவரை புகமுடியாமல் தீட்டில் கிடக்கும் தமிழனைப் பற்றி படம் எடுங்கள்.
நம் தாய் நாடு அமெரிக்காவுக்கு விற்பனையாவதைப் பற்றி படம் எடுங்கள்.
இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தைப் பற்றி படம் எடுங்கள்.
தமிழகத்துக்குக் காவிரித் தண்ணீர் மறுக்கப்படுவதைப் பற்றி படம் எடுங்கள்.

சமூகம் உருப்படட்டும். கூடவே காதலும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டு உருப்பட்டுப்போகும். அப்போது தன் மகள் காதலித்துவிட்டாள் எனும் குற்ற உணர்வோடு 'சேரன்கள்' இங்கே ஒப்பாரிவைக்க வேண்டி இருக்காது!

9 comments:

Anonymous said...

செய்த பாவத்துக்காக, சேரன் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.....??

ippdi loosu thanama eluthurathukku munnadi konjam yosikkkanum...cheran love a pathi padam eduthuttaar..appdina, murder, rape pa pathi padam eduthavan family la enna nadakkanum?

oruthan sikkita pothum....Balachandar edukkatha story ya...avar thinna 1 tonne uppukku innum thanni kudikkala

ப.கந்தசாமி said...

சரியாகச் சொன்னீர்கள்.

Anonymous said...

ஆமா அம்பிகாவதி அமராவதி எல்லாம் சேரன் படம் பார்த்துதான் காதலிக்க கற்றுகொண்டார்கள்.

நீரும் உன்னுடைய குப்பை பதிவும்

Anonymous said...

I completely agree with the blog. Tamil cinema has been projecting again and again that any poRukki can eye any beautiful and/or rich girl and he will have to win that kaadal. Cheran and his likes, including KB will suffer one day for all their disservice to the Tamil society.

Unknown said...

நீரும் உன்னுடைய குப்பை பதிவும்

Unknown said...

நீரும் உன்னுடைய குப்பை பதிவும்

Unknown said...

Yeathunai sariyana pathivu ...
Right time...Congratulations P Pamaran..

Anonymous said...

நீரும் உன்னுடைய குப்பை பதிவும்- Sari.

Unknown said...

சூப்பர் சார்

Post a Comment